அமெரிக்க-இந்திய அரசியலமைப்பு சட்ட ஒப்பீடு விவாத போட்டியில் 4 மாணவர்கள் தேர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 20, 2019

அமெரிக்க-இந்திய அரசியலமைப்பு சட்ட ஒப்பீடு விவாத போட்டியில் 4 மாணவர்கள் தேர்வு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப்பல்கலையில், ‘அமெரிக்க-இந்திய அரசியலைப்புச்சட்டங்கள் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் விவாதப்போட்டி நேற்று நடந்தது. இதில், 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக முறையை இந்தியா, அமெரிக்க நாடுகள் பின்பற்றி வருகின்றன. அந்தந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டங்களின் கீழே அரசும், சமுதாயமும் கட்டமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க துணைத் தூதரகமும், சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து இரு நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டங்கள் குறித்து மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விவாதப்போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், இப்போட்டியின் மூலம் பொதுமக்களின் உரிமைகள், சுதந்திரம், சொத்து உரிமை குறித்து விழிப்புணர்வும் மாணவர்களிடத்தில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த போட்டியானது, ‘அமெரிக்க-இந்திய அரசியலைப்புச்சட்டங்கள் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் கொச்சி, பெங்களூரு, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள சட்டப்பல்கலைகளில் ஏற்கனவே நடத்தப்பட்டன. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து சென்னை, தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப்பல்கலையில் நேற்று இதே தலைப்பில் சம்பந்தப்பட்ட போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு சட்டப்பல்கலைகளை சேர்ந்த மாணவர்கள், பட்டதாரி மாணவர்கள் என 96 பேர் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி சாரா கிரீன்கிராஸ், அஸிம் பிரேம்ஜி யுனிவர்சிட்டி பேராசிரியர் அருண் திருவேங்கடம், சென்னை உயர் நீதிமன்ற அட்டர்னி ஜெனரல் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிறகு மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைப்பில் விவாதிக்க துவங்கினர். ஒவ்வொரு கட்டங்களாக போட்டி நடத்தப்பட்டது. இறுதியாக நடந்த போட்டியில், டபுள்யூசிசி கல்லூரியை சேர்ந்த அனிதா எலிசபெத், ஸ்கூல் ஆப் எக்ஸ்ஸெலன்ஸ் இன் லாவை சேர்ந்த பவித்ரா சுந்தரராஜன், லயோலா கல்லூரியை சேர்ந்த கைலாஷ் கவுதமன் மற்றும் பிரணவ் சுரேஷ் ஆகியோர் முறையே தேர்வு செய்யப்பட்டனர். தற்போது தேர்வு செய்யப்பட்ட 4 பேர் மற்றும் இதற்கு முன்பு நடந்த போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இடையே கடைசி இறுதிப்போட்டி வரும் செப்டம்பர் 14ம் தேதி சென்னை, லயோலா கல்லூரியில் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக்புரோ லேப்டாப் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews