👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பாரத சாரண, சாரணியர் இயக்கம் என்னும் ‘‘ஸ்கவுட்’’ இயக்கம் மிகப் பெரிய தன்னார்வ சீருடை அணிந்த, கல்வி சார்ந்த, நாடு தழுவிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம், சகோதரத்துவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, தன்னம்பிக்கை, பிறர் நலன் பேணுதல், ஆளுமைப் பண்பு ஆகிய நற்பண்புகளை வளர்த்து வருகிறது. கடந்த 1916ம் ஆண்டு டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் ஜி.எஸ். அருண்டேல் ஆகியோரால் சென்னையில் இந்தியன் பாய்ஸ் ஸ்கவுட் அசோசியேஷன் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் 10வது மாநாடு தற்போது சென்னையில் நடக்கிறது. இதுகுறித்து, சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:கடந்த 1927 செப்டம்பர் மாதம் சென்னையில் காந்தியடிகள் சாரண, சாரணியர் இடையே பேசினார். அதற்கு பிறகு தமிழகத்தில் 1968ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை 9 மாநில மாநாடுகள் நடந்துள்ளன. 22 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சென்னையில் மீண்டும் 10வது மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாரண, சாரணியர் இயக்கம் 100 நாடுகளிலும், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 131 கல்வி மாவட்டங்களில் 4 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
10வது மாநில மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. மாநாட்டை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். மாநாட்டுக்காக தமிழக அரசு ஏற்கனவே ₹2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதன் வட்டி வருவாயில் இருந்து செலவிடப்படும். மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 20 ஆயிரம் சாரண, சாரணியர் கலந்து கொள்கின்றனர். அதில் சாகச விளையாட்டு, மாநில மாவட்ட கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார அணிவகுப்புகள், கலர் பார்ட்டி போட்டிகள், திருவிழாக்கள் ஆகியவற்றை நடத்தி காட்ட உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U