ராகிங் மாணவர்கள் தேர்வு எழுத தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 24, 2019

ராகிங் மாணவர்கள் தேர்வு எழுத தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஒடிசாவில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களை &'ராகிங்&' செய்த &'சீனியர்&' மாணவர்கள் 10 பேர் தேர்வு எழுத பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்ப பல்கழைக்கழகம் உள்ளது. இங்கு விடுதியில் தங்கி படிக்கும் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களை சில &'சீனியர்&' மாணவர்கள் &'ராகிங்&' செய்தனர். அந்த &'வீடியோ&' சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ராகிங்கில் ஈடுபட்ட 10 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதித்து பல்கலை துணை வேந்தர் உத்தரவிட்டார்.மேலும் ராகிங்குக்கு உடந்தையாக இருந்த 52 மாணவர்களுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.விடைதாள் மோசடிஇதற்கிடையே ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் பெர்ஹாம்பூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி நேற்று ஆய்வு நடத்தினார்.அங்கு பத்தாம் வகுப்பில் 87 மாணவிகள் படிக்கின்றனர். அவர்களிடம் உரையாடிய போது அவர்களது ஒன்பதாம் வகுப்பு இறுதி தேர்வு விடை தாள்கள் வழங்கப்படாதது தெரியவந்தது.இது குறித்து ஆசிரியர்களிடம் விசாரித்தபோது மாணவிகளின் விடைத் தாள்கள் திருத்தப்படாமல் அனைவரையும் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி அடைய செய்தது தெரியவந்தது. இதையடுத்து அரசுப் பள்ளி பொறுப்பாளரை &'சஸ்பெண்ட்&' செய்த மாவட்ட கல்வி அதிகாரி மூன்று ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு &'நோட்டீஸ்&' அனுப்பினார். திருத்தப்படாத விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை மூன்று நாட்ளில் திருத்தி மாணவிகளின் குறைபாட்டை கண்டறிந்து பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயார் செய்யுமாறு மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews