முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்தும் அரைகுறையாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம்: குழந்தைகள் தவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 28, 2019

முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்தும் அரைகுறையாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம்: குழந்தைகள் தவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருவொற்றியூர் மண்டலம் 7வது வார்டு, கார்கில் நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால், இங்கு படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகராட்சி சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. பின்னர், பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிட பணிகள் நடைபெற்றது. ஆனால் அதை முறையாக, முழுமையாக செய்யவில்லை. புதிய கட்டிடத்திற்கு வர்ணம் பூசவில்லை. கட்டிடத்திற்கு மேலே பொருத்த வேண்டிய குடிநீர் தொட்டியை கீழே வைத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு முறையும் சமையலுக்கு குடிநீர் பயன்படுத்த மின் மோட்டாரை இயக்கி, தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. சிறுவர்கள் நடந்து செல்லும் இடங்களில் கருங்கற்கள் சிதறி கிடக்கிறது. மேலும், சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் வெளியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் சிறுவர், சிறுமியர் படிக்கும் அறைக்குள் புகுந்து விடுகிறது. இவ்வாறு அரைகுறையாகவும், அவசரமாகவும் முடிக்கப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தில் வேறு வழியில்லாமல் சிறுவர், சிறுமியர்கள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி கட்டுமான திட்டத்திற்கு முழுமையாக நிதி வழங்கியும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அதை முழுமையாக முடிக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews