👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
போதையில், பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த, அரவட்லா மலைகிராமம், பாஸ்மார்பெண்டாவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 120 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
தலைமை ஆசிரியராக, பாரதி அம்பேத்கர், 45, என்பவர் பணி புரிகிறார். ஆசிரியர்களாக, செந்தில் குமார், 48, உட்பட, மூவர் பணிபுரிகின்றனர்.
இதில், பாரதி அம்பேத்கர், செந்தில்குமார் ஆகியோர், தினமும், மது போதையில் பள்ளிக்கு வருவதாக, புகார்கள் வந்தன.வாணியம்பாடி கல்வி அலுவலர், லதா நடத்திய விசாரணையில், அவர்கள், போதையில் பள்ளிக்கு வருவது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் இருவரும், அந்தப் பள்ளியில் இருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U