உடற்கல்வி ஆசிரியர் உட்பட மூவர் கைது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

உடற்கல்வி ஆசிரியர் உட்பட மூவர் கைது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழிலதிபர் வீட்டில், 48 சவரன், 32 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில், உடற்கல்வி ஆசிரியர், கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை, அனுப்பானடி, சின்னகண்மாய் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 66; தொழிலதிபர். பள்ளி நிர்வாகிஜூன், 27 மதியம், 1:45 மணிக்கு, 'ஹெல்மெட்' அணிந்த இருவர், இவரது வீடு புகுந்து, குடும்பத்தினரை தாக்கி, 48 சவரன் நகை மற்றும் 32 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.இது தொடர்பாக, கொடைக்கானலில் பதுங்கியிருந்த, மதுரையைச் சேர்ந்த, ஜஸ்டின் நிர்மல், தினேஷ்குமார் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:தனியார் பள்ளி நிர்வாகியாக, வெற்றிவேல் இருந்தார். அப்பள்ளியில், வீரகுமார், 45, என்பவன், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தான். முறைகேடு தொடர்பாக, வீரகுமார் மீது வெற்றிவேல் நடவடிக்கை எடுத்தார்.அதற்கு பழி தீர்க்க, வெற்றிவேல் வீட்டில் கொள்ளையடிக்க, நண்பர்கள் ஜஸ்டின் நிர்மல், தினேஷ்குமாருடன் சேர்ந்து திட்டமிட்டான்.
இதன்படி, தினேஷ்குமார், ஜஸ்டின் நிர்மல் கொள்ளையடித்து, நகை, பணத்தை வீரகுமாரிடம் கொடுத்து, கொடைக்கானல் சென்றனர்.சொகுசு கார்கள்அங்கு சொகுசு விடுதியில் இருந்தபோது சிக்கினர். அவர்களது தகவல்படி, வீரகுமார் மதுரையில் பிடிபட்டான். நகை, 30 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.பள்ளியில் வீரகுமார் பணியாற்றிய போது, மாணவர்களின் வசதியான பெற்றோரை அடையாளம் கண்டு, அவர்களுடன் பழகி, வீட்டிற்கு அடிக்கடி சென்று, நோட்டமிடுவான். பின், அந்த வீடுகளில் கொள்ளையடிப்பான்.'கொள்ளை நடந்த வீட்டின் பெண்கள், உடந்தையாக இருந்தனர்' என, போலீசாரிடம் பொய் தகவல் கூறுவான். அதன் மூலம் வழக்கில் தப்பிக்கலாம் என திட்டமிடுவான். கொள்ளையடித்த பணத்தில், சொகுசு கார்கள், அலைபேசிகள் வாங்கி அனுபவித்தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews