👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விருதுநகர் மாவட்டத்தில் சுட்டி விகடன் நடத்திய `நம் மாவட்டத்தை நாம் அறிவோம்' தேர்வில் 23,000 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவுடன் சுட்டி விகடன் தனது 20-ம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், தங்கள் சொந்த மாவட்டத்தின் சிறப்பம்சங்களை அறிந்துகொள்ளும் வகையில் இன்ஃபோ சிறப்பிதழை வெளியிட்டு சுட்டி விகடன் தேர்வு நடத்தியது.
சேலம், தர்மபுரி, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கல்வியில் முன்னோடி மாவட்டமான விருதுநகர் மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நடைபெற்ற `விருதுநகர் 200’ தேர்வில் அதிகபட்சமாக 23,000 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர்.
இதற்கான தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜூலை 20-ம் தேதி விருதுநகர் அருகே உள்ள ஏ.ஏ.ஏ கல்லூரியில் பரிசுகள் வழங்கப்படும். அந்த விழாவில் விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர், மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி உள்ளிட்டோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்களும், பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்க உள்ளனர். அதேபோல அனைத்து மாணவர்களுக்கும் சுட்டி விகடன் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U