மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு 3.52 லட்சம் பேர் தேர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 31, 2019

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு 3.52 லட்சம் பேர் தேர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
,'சிடெட்' எனப்படும் மத்திய ஆசிரியர் கல்வி தகுதி தேர்தலில், 3.52 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற, இந்த அமைப்பு நடத்தும், சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.கடந்த, 1௨ ஆண்டுகளாக இந்த தேர்வை நடத்தி வரும், சி.பி.எஸ்.இ., கடந்த, 7ம் தேதி நடத்தி தேர்வில், 23.77 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிந்து, 23 நாட்களே ஆன நிலையில், முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.தேர்வு எழுதிய, 23.77 லட்சம் பேரில், 3.52 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த, 2.15 லட்சம் பேரும், ஆறு முதல் எட்டாம் வகுப்ப வரை பாடம் நடத்த, 1.37 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவை, 23 நாட்களிலே முதல் முறையாக வெளியிட்டதற்காக, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த 7ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 20 லட்சத்து 84 ஆயிரத்து 174 பேர் எழுதினர். நாடு முழுவதும் 20 மொழிகளில் 104 நகரங்களில் இந்த தேர்வு நடந்தது . தேர்வு எழுதியவர்களில் 37 ஆயிரம் பேர் காது கேளாமை மற்றும் பேச இயலாதவர்கள். இதைத் தொடர்ந்து மேற்கண்ட தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பு கடந்த 26ம் தேதி சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. . தேர்வு எழுதிய நபர்கள் www.ctet.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும் சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews