அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 13, 2019

அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - கைது அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர்கள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக, போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்ததால, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இலவச கட்டாய கல்வியை வலியுறுத்தி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதேபோல், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். அலுவலக வளாகத்திற்குள் செல்ல முயன்றதால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews