👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மணிபால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் புராஜெக்ட் மனஸ் (project MANAS) என்ற முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட்ட சோலோ (SOLO) என்ற ரோபோ ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அந்தக் குழுவுக்கு வென்று கொடுத்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ரோபா வடிவமைப்புப் போட்டியில் மணிபால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு முதல் இடத்தை வென்றுள்ளது.
அமெரிக்காவின் மிசிகனில் ரொசெஸ்டர் என்ற இடத்தில் உள்ள ஓக்லண்ட் பல்கலைக்கழகத்தில் நுண்ணறிவு மிக்க தரையில் இயங்கும் ரோபாவைத் தயாரிக்கும் போட்டி (Intelligent Ground Vehicle Competition) அண்மையில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 35க்கு மேற்பட்ட மாணவர்களின் குழு இப்போட்டியில் பங்கேற்றன.
இதில் இந்தியாவிலிருந்து ஐஐடி சென்னை, ஐஐடி கான்பூர், ஐஐடி கராக்பூர், டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மணிபால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றிலிருந்து தனித்தனியே மாணவர் குழுக்கள் போட்டியில் கலந்துகொண்டன.
இதில் மணிபால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் புராஜெக்ட் மனஸ் (project MANAS) என்ற முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட்ட சோலோ (SOLO) என்ற ரோபோ ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அந்தக் குழுவுக்கு வென்று கொடுத்துள்ளது. ஐஓபி, டிசைன் மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டியில் முன்வைக்கப்பட்ட இந்த ரோபோ மொத்தம் 44 புள்ளிகளை புராஜெக்ட் மனஸ் குழுவுக்கு பெற்றுத்தந்து, முதல் இடத்தை வசப்படுத்தியது. ஐஓபி பிரிவில் முதல் இடத்தையும் டிசைன் பிரிவில் இரண்டாம் இடத்தையும் சைபர் பாதுகாப்புப் பிரிவில் ஆறாவது இடத்தையும் பெற்றது.
மணிபால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பல்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்து இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். இதனை மேலும் மேம்படுத்தி இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் காரை தயாரிக்கும் முயற்சியைத் தொடர உள்ளனர்.
இவர்களுடைய சோலோ ரோபோ இரண்டாவதாக கலந்துகொண்ட போட்டியிலேயே முதல் இடத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் போட்டி 27ஆம் ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்றது. இதற்கு முன்பாக 2017ஆம் ஆண்டு ஐஐடி மும்பை இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது. இரண்டாவதாக மணிபால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் குழு தற்போது இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
சோலோ ரோபோவை உருவாக்க மணிபால் உயர்கல்வி அகாடெமி மற்றும் பிறரின் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
சித்தார்த் வெங்கட்ராமன், ஸ்ரீஜித் சிங் ஆகியோர் தலைமையில் ஆர்யா கரானி, அன்சல் டயஸ், ரக்ஷிட் ஜெயின், சிவ்நேஷ் கைதான், தீரஜ் மோகன், சரத்கிருஷ்ணன் ரமேஷ், அனிருத் காஷ்யப், நிஷான் டி-அல்மெடியா, கோகுல் மற்றும் தனயா மாண்டேக் ஆகியோர் கொண்ட குழு போட்டியில் பங்கேற்றது. வழிகாட்டியாக பேராசிரியர் ஆஷாலதா நாயக் இருந்துள்ளார். இவர்களுக்கு ஓக்லண்ட் பல்கலைக்கழகத்திடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.2.65 லட்சம் பரிசாகக் கிடைத்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U