👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இது குறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் சிலர் டெரீஸின் தைரியத்தைப் பாராட்டினர். சிலர் எத்தியோப்பியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு இளம் வசதிலேயே திருமணம் நடப்பது பற்றி கவலை தெரிவித்தனர்.

எத்தியோப்பியாவில் 21 வயது பெண் தனது குழந்தையை ஈன்றெடுத்த அரை மணி நேரத்தில் அரசுப் பொதுத்தேர்வு எழுதச் சென்றுள்ளார்.
எத்தியோப்பியாவைச் சேர்ந்த அல்மாஸ் டெரீஸ் என்ற பெண் தன் குழந்தையைப் பெற்ற 30 நிமிடங்களில் அந்நாட்டின் தேசிய பொதுத்தேர்வை எழுதியுள்ளார்.
மருத்துவமனையிலிலேயே அவர் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களை நெகிழ வைத்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் சிலர் டெரீஸின் தைரியத்தைப் பாராட்டினர். சிலர் எத்தியோப்பியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு இளம் வசதிலேயே திருமணம் நடப்பது பற்றி கவலை தெரிவித்தனர்.
2018ஆம் ஆண்டு யுனிசெப் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தில், எத்தியோப்பியாவில் உள்ள பெண்களில் பத்தில் நான்கு பேர் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டோ, அல்லாமலோ மற்றொருவருடன் சேர்ந்து வாழ்கின்றனர் எனத் தெரிவிக்கப்ப்ட்டது.
எத்தியோப்பியாவில் 1.5 கோடி குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியது. கிராமங்களில் வசிக்கும் சிறுமிகளும், ஏழை பெண்களும் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்கள் கல்வி அறிவு குறைவாக உள்ள அல்லது கல்வி அறிவே பெறாதவர்களாக இருப்பதையும் யுனிசெப் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U