👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆய்வகம், நூலகம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்யாத தனியார் பொறியியல் கல்லூரியின் 4 எம்.இ. படிப்புகளுக்கு தடைவிதித்து அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை சரியானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள எஸ்எம்கே ஃபோம்ரா தொழில்நுட்பக் கல்விநிறுவனத்தில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.
பின்னர்,அக்கல்லூரியின் ஆய்வகம், நூலகம் மற்றும் பணியாளர்கள் தொடர்பான குறைகளை சுட்டிக்காட்டி, அதை நிவர்த்தி செய்யுமாறு நோட்டீஸ் பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிக்கை அளித்தது. அது தெளிவாக இல்லை என்றுகூறி, அந்த கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், தெர்மல், பவர் சிஸ்டம், விஎஸ்எல்ஐ டிசைன் ஆகிய 4 பிரிவுகளில் பட்ட மேற்படிப்புகளுக்கு (எம்.இ) இந்த கல்வியாண்டில் இணைவிப்பு வழங்க மறுத்தும், பி.இ. மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை 25 சதவீதம் குறைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை
இதை எதிர்த்து கல்லூரி முதல்வர் வி.கிருஷ்ணகுமார் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன், அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏ.குமார் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘’குறைகளை முழுமையாக நிவர்த்தி செய்யாத பொறியியல் கல்லூரி நடத்தும் 4 பட்ட மேற்படிப்புகளுக்கு இணைவிப்பு வழங்க மறுத்தும், 2 பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ள நடவடிக்கை சரியே’’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U