19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்- பள்ளிக்கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 25, 2019

19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்- பள்ளிக்கல்வித்துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 19 ஆயிரத்து 426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆயிரத்து 279 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 17 ஆயிரத்து 147 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். மேலும், ஜூலை 9-ல் தொடங்க உள்ள கலந்தாய்வில் உபரி ஆசிரியர்களுக்கு அவரவர் பணியாற்றும் மாவட்டத்துக்குள்ளேயே கட்டாய பணி மாறுதல் வழங்கி ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்தவும் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews