பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 07, 2019

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
காளையார்கோவில் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. காளையார்கோவில் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட 337 குடியிருப்பு பகுதிகளில் 6 வயது முதல் 18 வயது வரையுள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி இம்மாதம் முழுவதும் நடைபெறுகின்றது. இதுகுறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) புளோரா கூறுகையில், ஆண்டு தோறும் நடைபெறும் இக்குழந்தைகளின் கணக்கெடுப்பு 6 முதல் 14 வயதாக இருந்தது. கடந்த ஆண்டு முதல் அக்கணக்கெடுப்பு பணியின் வயது 14லிருந்து 18வயதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 1முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளிக் கல்வியினை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு இந்நடவடிக்கையை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இக்கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் மட்டுமல்லாது பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேளாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குடியிருப்பு பகுதியில் இவ்வயது மாணவர்கள் பள்ளி செல்லாமலோ, மாற்றுத்திறனுடையவராகவோ இருந்தால் அக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம் மற்றும் வட்டார வளமையத்தில் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம் என்று தெரிவித்தார். இப்பணியை மேற்கொள்வதற்காக ஆசிரியர் பயிற்றுநர் குடியரசி சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கணக்கெடுப்பு பணியினை வட்டார கல்வி அலுவலர்கள் ஜோசப் ஆண்டோரெக்ஸ், சகாயச்செல்வன், இந்திராணி மற்றும் மாவட்ட திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் ஆசாத் ஆகியோர் பார்வையிட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews