👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் புதுச்சேரி மாணவர் களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் சூழலில், இலவச பேருந்து ரத்து, கூடுதல் கல்விக் கட்டணம் என அடுக்கடுக்கான சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவே இல்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தேர்தலில் பிரதிபலிக்கவும் வாய்ப்புள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985-ல் தொடங்கப் பட்டபோது நிலம் கொடுத்தோர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் படிக்க 25 சதவீத இடஒதுக்கீடு கோரப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் 66-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 18 பாடப்பிரிவுகளில் மட்டுமே புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டுக்கான அறிவிப்பிலும் இடஒதுக்கீடு இல்லை.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயர் கல்வி வாய்ப்பை பெறுவதற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவ, மாணவிகள் வருவதற்கான இலவச பேருந்து முறை ரத்தாகி, செமஸ்டருக்கு ரூ. 4 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்வி கட்டணம் அனைத்து பாடப்பிரிவுகளிலும் 83 சதவீதம் சராசரியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதுபற்றி அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவே இல்லை என மாணவ, மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் கூறுகையில், “புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மரில் 27 சத இடஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு தரப்படுகிறது. ஆனால் மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரி மாணவர்களை நிராகரிக்கிறது. குறிப்பாக வேலை வாய்ப்பு உள்ள பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு தரப்படுவதில்லை. பல்கலைக்கழக நிர்வாகக்குழு கூட்டத்திலேயே இடஒதுக்கீட்டை முடிவு செய்து அறிவிக்கலாம். ஆனால், மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்கின்றனர். திட்டமிட்டு புறக்கணிக் கின்றனர்.
மாநில காங். தேர்தல் வாக்குறுதியில் 25 சத இடஒதுக்கீடு பெற்று தருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் செய்யவில்லை. எதிர்க்கட்சியைச் சேர்ந்த புதுச்சேரியுள்ள இரு எம்பிக்களும் மத்திய அரசை வலியுறுத்தவில்லை. தற்போது ஜிப்மரை விட புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கட்டணம் அதிகம். பல போராட்டங்கள் நடத்தியும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்புகள் எங்களை கண்டுகொள்ளவில்லை” என்று குற்றம் சாட்டுகின்றனர்.
4 ஆயிரம் இளையோர் பாதிப்புஇது தொடர்பாக பல்கலைக் கழங்களிலுள்ள பல்வேறு சங்கப் பிரதிநிதிகள் தரப்பில் விசாரித்தபோது, “ஜிப்மரில் மருத்துவ படிப்புக்கு புதுச்சேரி மாணவர்களு்க்கு சரியான இடஒதுக்கீடு தருகிறார்கள். ஆனால், கலை அறிவியல் படிப்புக்கான பல்கலைக்கழகத்தில் ஒரு சில பேராசிரியர்கள் செயல்பாட்டால்தான் இடஒதுக்கீடு புதுச்சேரியை சேர்ந்தோருக்கு தருவதில்லை. இதை முதல்வர், அமைச்சரவை, ஆளுநர், எம்பிக்கள், எதிர்க்கட்சிகள் என யாரும் கண்டுகொள்வதில்லை. வரும் கல்வியாண்டில் இந்நிலை மேலும் மோசமாகிறது. இலவச பேருந்து ரத்து, கட்டண உயர்வு என அடுத்தடுத்த பிரச்சினைகளில் புதுச்சேரி மாணவ, மாணவிகள் சிக்கி பாதிக்கப்படுவதால் புதுச்சேரியைச் சேர்ந்த 4 ஆயிரம் இளையோர் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்” என்றனர்.
4 ஆண்டுகளுக்கு முன்புஇதுதொடர்பாக பல்லைக்கழக வட்டாரங்களில் விசாரித்தபோது, “அனைத்து படிப்புகளிலும் இடஒதுக்கீடு அளிக்கலாம் என்ற குழு பரிந்துரையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அனுமதிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய துணைவேந்தர் அனுப்பி வைத்தார். இதுவரை பதில் வரவில்லை” என்கின்றனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்