👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459

தேர்வு முறைகேடுகளைத் தொடர்ந்து, தற்காலிக பேராசிரியர்களை தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்று முடிவெடுத்த அண்ணா பல்கலைக்கழகம், தற்போது வினாத்தாள் வடிவமைப்பிற்கு அவர்களின் உதவியை நாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் தற்காலிக பேராசிரியர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களில் 37 பேர் பணியிலிருந்தே நீக்கப்பட்டனர்.
இதன் எதிரொலியாக மொத்தம் உள்ள 250 ஒப்பந்த பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்களை, தேர்வு தொடர்பான பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் முடிவு எடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரை 40-க்கும் அதிகமான பாடங்களை, தற்காலிக பேராசிரியர்கள் தான் நடத்தி வருகிறார்கள். ஏப்ரல் – மே மாதத்தில் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள்களை வடிவமைக்கும் பொறுப்பு, சம்பந்தப்பட்ட பாடங்களை நடத்தாத நிரந்தர பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டதன் காரணமாக வினாத்தாளை வடிவமைக்க முடியாமல் நிரந்தர பேராசிரியர்கள் திணறும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், வினாத்தாள் வடிவமைப்பை விரைந்து முடிக்க ஏதுவாக, வினாத்தாள் தயாரிக்கும் பணியில் தமக்கு கீழ் இருக்கும் நம்பகமான தற்காலிக பேராசிரியரின் உதவியை நாட அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து நிரந்தர பேராசிரியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக பணியாளர்களை தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துவிட்டு, தற்போது வினாத்தாள் வடிவமைப்பிற்கு அவர்களின் உதவியை நாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்