👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
ரூ.20 முதல் ரூ.40 வரை: அதன்படி, ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 (சிலீப்பர் வகுப்பு) முதல் ரூ.40 (ஏசி வகுப்பு) வரையிலான சேவை கட்டணம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இந்த சலுகையை நீட்டித்து வந்தது. இறுதியாக மார்ச் 31-ம் தேதி வரையில் சேவை நீட்டித்து அறிவித்தது. இதற்கிடையே, சலுகை தேதி முடிந்துள்ளதால், இந்த சேவை தொடருமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
பண மதிப்பு நீக்கம் இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மத்திய அரசு 2016 நவம்பரில் கொண்ட வந்த பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சேவை கட்டணத்தை ரத்து செய்தது. இந்தச் சலுகையை படிப் படியாக நீட்டித்து வந்தது. இதனால், ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும், மக்களின் வசதிக்காக இந்த சலுகையை ரயில்வே அளித்து வருகிறது.
மறுதேதி குறிப்பிடாமல்... ஏற்கெனவே, அறிவித்தபடி மார்ச் இறுதி வரையில் இருந்த சலுகை முடிந்துள்ளதால், தற்போது இந்த சலுகை மறுதேதி குறிப்பிடாமல் நீட்டித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது’’ என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்