👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
அன்னுார் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு தரமுயர்த்தப்படுமா, என, பெற்றோர் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.அன்னுார் வட்டாரத்தில், பல நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பெற்றோரும், அப்பகுதி மக்களும் போராடி வருகின்றனர்.
செல்லப்பம்பாளையம் நடுநிலைப் பள்ளியில், 250 பேருக்கு மேல் படித்து வருகின்றனர். இப்பகுதி மாணவர்கள், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்க, ஈரோடு மாவட்டம், புளியம்பட்டிக்கு செல்ல வேண்டி உள்ளது.
இப்பள்ளியை தரமுயர்த்தக்கோரி பல ஆண்டுகளாக போராடியும் பயனில்லை.அதேபோல், பிள்ளையப்பம் பாளையம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரமுயர்த்த, தேவையான டிபாசிட் தொகை அரசுக்கு செலுத்தப்பட்டு விட்டது. தேவையான இடமும் தொழிலதிபர் ஒருவரால் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர். இதே போல், கஞ்சப்பள்ளி, பொகலுார் நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரமுயர்த்த வேண்டும் என, மக்கள் கோரி வருகின்றனர்.
அதேபோல், பொன்னே கவுண்டன் புதுார், அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரமுயர்த்த, பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றன.இப்பகுதி மாணவ, மாணவியர், பிளஸ் 1 படிக்க எட்டு கி.மீ., தொலைவில் உள்ள கோவில்பாளையம் அல்லது வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது.
இதற்காக சபாநாயகர் தனபால், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரிடம் நேரில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாணவ, மாணவியரின் சிரமத்தை போக்க, அன்னுார் வட்டாரத்தில் தகுதியுள்ள பள்ளிகளை தரமுயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் மே மாதத்தில் மாணவர் சேர்க்கையை நடத்தி விடுகின்றனர். எனவே, பள்ளிகளை தரமுயர்த்தும் உத்தரவை ஏப்ரல் இறுதிக்குள் பிறப்பிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்