விடுமுறை தினத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பு - ஆசிரியர்களை பழிவாங்குகிறதா அரசு? கொந்தளிக்கும் சங்கங்கள் - பத்திரிகை செய்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 25, 2019

விடுமுறை தினத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பு - ஆசிரியர்களை பழிவாங்குகிறதா அரசு? கொந்தளிக்கும் சங்கங்கள் - பத்திரிகை செய்தி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீபத்தில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு பிடிகொடுக்காததால், லோக்சபா தேர்தலில், இவர்களின், 12 லட்சம் ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில், ஏப்., 18ல், தேர்தல் நடப்பதையொட்டி, அன்று ஓட்டுப்பதிவு மையங்களில், பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, தேர்தல் வகுப்புகளை, தேர்தல் கமிஷன் நடத்த உத்தரவிட்டுள்ளது. ஏப்., 14 தமிழ் புத்தாண்டு அன்று, தேர்தல் வகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த நாள் அரசு விடுமுறை என்பதால், அன்று வகுப்பு நடத்துவதா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:தமிழகத்தில் தான், நாம் வசிக்கிறோமா என சந்தேகம் ஏற்படும் வகையில், அரசின் செயல்பாடு உள்ளது. ஏப்., 6 தெலுங்கு வருடப்பிறப்பு அன்று, அரசு விடுமுறை. அன்றைய நாளை கண்டுகொள்ளாமல், தமிழ் புத்தாண்டு தினத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.அரசு அதிகாரிகளுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் தமிழ் புத்தாண்டு விடுமுறை நாள் என்பது தெரியாதா? தமிழகத்தில், தமிழர்கள் வஞ்சிக்கப்படுவது தொடர்கிறது. இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா?இவ்வாறு அவர்கள் கூறினர்
.இது குறித்து, தி.மு.க., வின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 'பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத ஆளுங்கட்சி மீது, கோபத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு, இந்த சின்ன கோரிக்கையை நிறைவேற்றினால், நம் மீது அவர்கள் நம்பிக்கை வைப்பர். அது ஓட்டுகளாக மாறி, 18 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். 'இதன்மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம்' என, தி.மு.க., கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகிறது. இதற்கிடையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானோர், அ.தி.மு.க.,வுக்கு எதிராக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே, 'கேன்வாஸ்' செய்து வருகின்றனர்.இது குறித்து, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த, 2003ல், அரசு ஊழியர்களுக்கு எதிராக, வரலாறு காணாத அடக்குமுறையை, அப்போதைய, அ.தி.மு.க., அரசு மேற்கொண்டது. அதன் விளைவை, 2004 தேர்தலில் அனுபவித்தது. பின், அரசு ஊழியர்கள் மீதான அடக்குமுறை போக்கை, ஜெயலலிதா தவிர்த்தார். அவர்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காகவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, வாக்குறுதி கொடுத்தார்.
ஆனால், தற்போதைய அரசு, அடக்குமுறை மூலம் வெற்றி பெற்றதாக கருதுகிறது. '2 சதவீத ஆசிரியர்கள் என்ன செய்து விட முடியும்!' என, நினைக்கின்றனர். அவர்கள் கூறுவதை, 20 சதவீதம் பேர் கேட்க தயாராக உள்ளனர். ஆசிரியராக இருப்பவர், பலருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். இந்த அடிப்படையில், அ.தி.மு.க., அரசின் குறைகளை, மக்களிடையே கொண்டு செல்லும் பணியில், பலரும் மறைமுகமாக ஈடுபடுகின்றனர். தேர்தல் முடிவில், அரசு ஊழியர்களின் பலத்தை, இந்த அரசும் உணரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews