நிலுவை சம்பளம், பதவி உயர்வு கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 01, 2019

நிலுவை சம்பளம், பதவி உயர்வு கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நிலுவை சம்பளம் மற்றும் பதவி உயர்வு வழங்க கோரி, அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி மகளிர் மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கவில்லை.இந்நிலையில், எஸ்.டபிள்யூ.ஒ. பதவி உயர்வு, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவி ராஜலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் தாட்சாயிணி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர் நலச்சங்க தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சம்மேளன பொறுப்பாளர் முருகவேணி நன்றி கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews