புதிய வடிவில் வாட்ஸ்அப் மோசடி: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 14, 2019

புதிய வடிவில் வாட்ஸ்அப் மோசடி: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும் சில விஷயங்கள், வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அக்கவுண்ட் எண்களை பெற்று மோசடி நடப்பதாக எஸ்பிஐ எச்சரித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிஐ இது குறித்து எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது, வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை அளிக்குமாறு கூறி வாடிக்கையாளர்களுக்கு மோசடியான கோரிக்கைகள் வருவது குறித்து அதில் விவரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்ற தலைப்புடன் இருக்கும் அந்த செய்தியில், வாட்ஸ் அப் மற்றும் சமூக தளங்கள் வாயிலாக உங்களது அக்கவுண்ட் தகவல்களைப் பெற்று மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கு இதுபோன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக 1-800-111109 என்ற எண்ணுக்கு அழைத்து வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம். அதில்லாமல், மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு டெபிட் / கிரெடிட் கார்டு மதிப்பினைக் கூட்டித் தருவதாகக் கூறி தகவல்களைப் பெறுவார்கள். அதன் சிசிவி மற்றும் பயன்பாட்டுக் காலம் போன்றவற்றையும் கேட்டுப் பெற்று மோசடியில் ஈடுபடுவார்கள். சில நிமிடங்களில் உங்களுக்கு ஒரு ஓடிபி எண் வந்திருக்கும், அதனைக் கூறும்படி கேட்டு, டெபிட் / கிரெடிட் அட்டையில் இருக்கும் பணத்தை பறித்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews