வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், மாணவியர் தங்கள் புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட விபரங்களை பதிவிடக்கூடாது. அதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது: நீதிபதி, கருணாநிதி
காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய, குழந்தை உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெயர் பலகையை, மாவட்ட நீதிமன்ற எண் 2ன், நீதிபதி கருணாநிதி திறந்து வைத்தார். பின் அவர், பேசியதாவது: மாணவியர் படிக்கும் பருவத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ, அது போல, வாழ்க்கையிலும் சந்தோஷமாக வாழ வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பழகி கொள்ள வேண்டும்
சமூக வலைதளங்களை கவனமாக மாணவியர் கையாள வேண்டும். போட்டோ மற்றும் சொந்த விபரங்களை பதிவிடக்கூடாது. அதன் மூலம் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்