பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களின் விடைத்தாள்மதிப்பீட்டு பணிகள், மூன்றாம் முறையாக மாற்றி, டிச., 3ம் தேதிதுவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு, பருவத்தேர்வுகள், செய்முறை, எழுத்து என்ற இரண்டு பிரிவுகளாக கடந்த மாதம் முதல் நடந்து வருகிறது
கஜா புயல் மற்றும் அதன் பாதிப்பின் காரணமாக, கடந்த 15,16,17,19,20 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் முறையே, வரும் 24,22, 23, 26,28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
தற்போது, ஒத்திவைக்கப்பட்ட தேதிகளும் மாற்றப்பட்டு, புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த, தெளிவான பட்டியல் தொழில்நுட்ப கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு தேதிகள் தொடர்ந்து மாற்றப்படும் காரணத்தால், விடைத்தாள் மதிப்பீட்டு பணி துவங்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளது
Kaninikkalvi.blogspot.com
19ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்ட மதிப்பீட்டு பணி, 28ம் தேதிக்கு மாற்றப்பட்டு தற்போது, மீண்டும் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இதனால், பருவத்தேர்வு விடுமுறைகள் முழுமையாக பாதிக்கப்படும்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்