பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான, புதிய பாடத்திட்ட பணிகள், 80 சதவீதம் நிறைவடைவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான, புதிய பாடத்திட்ட பணிகள், 80 சதவீதம் நிறைவடைவு

மாநில பாடத்திட்டத்தின் கீழ், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டது
வரும் கல்வியாண்டில், பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான, புதிய பாடத்திட்ட பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்து விட்டன. இதற்கு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வல்லுனர் குழுவினர், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, சிலபஸ் தயாரிப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. எனவே, விரைவில் சிலபஸ் வெளியிட்டு, கருத்துகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது இதோடு, கோடை விடுமுறையிலே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும், விவாதிக்கப்பட்டு வருவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி மைய இயக்குனர் அறிவொளி கூறுகையில், ''வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தவுள்ள, புதிய பாடத்திட்டத்திற்கான பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்தன பாடக்கருத்துகளுக்கான அனிமேஷன், வீடியோ தரவுகள், 'tnscert' என்ற யு-டியூப் சேனலில் வெளியிடப்பட்டு வருகிறது. ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், கருத்துகள் தெரிவிக்கலாம்,'' என்றார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews