நீட் தேர்வு மற்றும் அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தமிழகம் முழுவதும் அரசு மாதிரி பள்ளிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி முதல்கட்டமாக மாவட்டத்திற்கு ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தத்தில் உள்ள துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது
இதற்காக அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வரும் 2019--2020ம் ஆண்டுக்கான எல்கேஜி முதல் பிளஸ் 2 வரையிலான ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி படிப்பதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது
இதன் மூலம் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளான விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற உள்ளது. 4 ஸ்மார்ட் வகுப்புகள் செயல்படுத்தப்பட உள்ளது
கணினி மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் பாடங்களை கற்பித்தல், உபகரணங்களை கொண்டு செயல்முறை விளக்கம் பெறுதல் போன்ற சிறப்பு அம்சங்களுடன் தூசியில்லாத கற்பித்தல் போர்டுகள் மூலம் பயிற்றுவிக்கப்படும். மேலும் அனைத்து வகுப்பறைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். வகுப்பறை தரைகளில் டைல்ஸ்கள் பதிக்கப்படும்
இதற்கு தேவையான நிதி ஆதாரங்களை அந்தந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, உள்ளாட்சி, மற்றும் உள்ளூரைச் சேர்ந்த பிரமுகர்களிடம் திரட்டி பள்ளியை மேம்படுத்த குழு அமைக்கப்படும்
இதில் பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர்ஆசிரியர் கழகம், கிராம கல்விக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்களுடன் பள்ளி தலைமையாசிரியர் அடங்கிய குழுவாக ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும். திறன்மிகுந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர். காலிப் பணியிடங்கள் என்பது இல்லாமல் அனைத்து ஆசிரியர்களையும் நிரப்ப முதன்மை கல்வி அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டு அவரது நேரடிக் கண்காணிப்பில் பள்ளி செயல்படும். பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், கடந்த காலங்களில் நத்தம் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் பல்வேறு அரசு பதவிகளை அலங்கரித்துள்ளனர். அந்த வகையில் இந்த பள்ளி பெருமைக்குரியதாகும். மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தியுள்ளது இந்த பள்ளியை சிறப்புப்படுத்துவதாக உள்ளது. இப்பகுதி மக்களுக்கு போதிய கல்வி சேவையை இந்த பள்ளி தொய்வின்றி வழங்க அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்