Breaking

Wednesday, October 03, 2018

கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்

பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை கல்லூரி கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென, திருப்பூர் மாவட்டத் திலுள்ள பல்வேறு ஊராட்சி கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி, திருப்பூர் மாவட்டத் திலுள்ள 265 ஊராட்சிகளில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடந்தது. இதில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களையும் சம விகிதத்தில் கல்லூரி கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென, காங்கயம் வட்டம் கணபதிபாளையம், தம்மரெட்டி பாளையம், கீரனூர், பழைய கோட்டை மற்றும் வெள்ளகோவில் ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு ஆகிய 5 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog