அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு தொடர்பான பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 09, 2018

Comments:0

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு தொடர்பான பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் 20,000 மாணவர்களுக்கு 500 தணிக்கையாளர்கள் மூலம் சி.ஏ. படிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக முதல் கட்டமாக ஈரோட்டில் 2,700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.


பிளஸ் 2 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 12 வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும். நீட் தேர்வுக்கு 412 மையங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணி நேரமும் மற்றும் விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews