பி ளஸ்-1 (11ம் வகுப்பு) தேர்வில் பெயிலான மாணவர்கள், மீண்டும் உடனடி தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டுள்ளது. அந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வரும் 28-ம் தேதி பிற்பகல் முதல் தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2017 -ம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு, பள்ளி அளவிலான ஆண்டுத் தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டுதான் (2017/18 கல்வி ஆண்டு) முதன் முதலாக பொதுத்தேர்வாக நடை பெற்றது. பிளஸ் 1 பொதுத் தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 7ந்தேதி தொடங்கி ஏப்ரல் 16ந்தேதி முடிவடைந்தது. அதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாயின.
இந்த ஆண்டு பிள11 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், பிளஸ்-2 தொடர்ந்து படிக்கலாம் என்றும், அதே வேளையில், தேர்ச்சிபெறாத பாடங்களை சிறப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.kaninikkalvi.blogspot.com
அதன்படி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு தேர்வுநாள் குறித்து பின்னர் அறிவிக்கப்பட்டும் என்று கூறியிருந்த நிலையில், உடனடி தேர்வுக்கான விண்ணப்பிக்க கடந்த 19ந்தேதி மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது உடனடி பிளஸ்1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 28ந்தேதி பிற்பகல் முதல் http://dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழக அரசு கல்வித்துறையின், தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.