Breaking

Friday, January 16, 2026

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையில் அரசு அலட்சியம் காட்டாமல் உரிய தீர்வு காண வேண்டும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையில் அரசு அலட்சியம் காட்டாமல் உரிய தீர்வு காண வேண்டும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்புகளை செய்ய வேண்டும் என்று போராட்டக் களத்தில் இருந்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்து வருகிறதே தவிர இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கணக்கெடுப்பதாகவும் ஊதிய நிறுத்தல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் போராட்டத்தை நகக்கி ஒடுக்கி விடலாம் எரசு நினைக்கிறது.

இதுபோன்ற எதிர்மறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். போராட்டம் தடத்துப்வர்களை பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு கானா வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதிய முரண்பாடுகளை சரி செய்து தர வேண்டுமென்பது போராட்டகளத்தில் உள்ளஆசிரியர்களின் கோரிக்கை மட்டுமல்ல தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்துகிற போளட்ட காய்கண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிககை குழுவான டிட்டோஜாக் அமைப்பும் வலியுறுத்திவருகிறது.


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய ஏற்றத்தாழ்வை நியாயத்தின் அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்பது இளைய ஆசிரியர்களின் கோரிக்கை மட்டுமல்ல மூத்த ஆசிரியர்களின் கோரிக்கையுமாகும் என்பதை அரசு உணர்ந்து வெள்ள வேண்டும். எனவே அரசு அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து தருகிறோமென்று ஏற்கனவே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, டிட்டோஜாக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளிடம் உறுதி அளித்ததை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதில் அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுமேயானால் அனைவரும் இணைந்ததீவிரமான போராட்டம் தவிர்க்கஇயலாததுஆகிவிடும்.

உடனடியாக தமிழ்நாடு அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை குறித்துஅகிலஇந்திய ஆசிரியர்கூட்டணியின் பொதுச்செயலாளாரெங்கராஜன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் (பொ) வேரா, மாநிலத் தலைவர் குணசேகரன் மாநிலப்பொருளாளர் துரைராஜ் ஆகியோர் கூட்டாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog