ஆராய்ச்சி மாணவர் தற்கொலை - சென்னை ஐஐடி பேராசிரியர் பணியிடை நீக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 28, 2023

Comments:0

ஆராய்ச்சி மாணவர் தற்கொலை - சென்னை ஐஐடி பேராசிரியர் பணியிடை நீக்கம்!

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம்.

மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

சென்னை ஐஐடி பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம்! சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்கள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் பேராசிரியர், மாணவரை உள்ளடக்கி 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் மார்ச் 31ல் ஆராய்ச்சி மாணவர் சச்சின் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பேராசிரியர் ஆசிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் மாணவர்களின் பாதுகாப்பு, வளாகத்தில் நெறிசார்ந்த நடைமுறைகளை கண்காணிப்பது, மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பது, கற்றலுக்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவது போன்றவை தொடர்பான பொறுப்புகளை கையாள ஐபிஎஸ் அதிகாரி ஜி.திலகவதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews