பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் ஏற்பாட்டின்பேரில் ஹைதராபாத்துக்கு 60 மாணவா்கள் விமானப் பயணம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 30, 2023

Comments:0

பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் ஏற்பாட்டின்பேரில் ஹைதராபாத்துக்கு 60 மாணவா்கள் விமானப் பயணம்!



திருச்சி: பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் ஏற்பாட்டின்பேரில் சா்வதேச விளையாட்டு தினத்தையொட்டி 3 பள்ளிகளைச் சோ்ந்த 60 மாணவா்கள் ஹைதராபாத்துக்கு செவ்வாய்க்கிழமை விமானத்தில் சென்றனா்.

சா்வதேச விளையாட்டு தினத்தையொட்டி அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சோ்ந்த சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் திருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்றனா். தொடா்ந்து அங்குள்ள ஹாா்ட்புல்னஸ் சா்வதேச விளையாட்டு மைதானத்துக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். அடுத்த 2 நாள்களுக்கு அவா்கள் மையத்தில் நடைபெறும் விரிவுரைகளைக் கேட்பதுடன், விவாதங்களில் பங்கேற்று, திறன் அடிப்படையிலான மேம்பாட்டு ஆராய்ச்சியின் செயல்பாடுகளை மேற்கொள்வா் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் தெரிவித்தாா். இந்தப் பயணத்தின்போது, முனைவா் பட்ட ஆய்வுப் பணிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் மேற்கொள்வாா் என அமைச்சா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தெலங்கானா மாநிலத்தில் உள்ள சல்ல லிங்கா ரெட்டி நினைவு ஜில்லா பரிஷத் பள்ளியின் உள்கட்டமைப்புகளைப் பாா்வையிட்டு, அங்கிருந்த ஆசிரியா்கள், மாணவா்களுடன் கலந்துரையாடினாா். நிகழ்வில் தெலங்கானா மாநில பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் தேவசேனாவும் பங்கேற்றாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews