"பள்ளிகளில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
படிக்கும் போதே புதிய தொழில் முனைவோரை உருவாக்க பள்ளிகளில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூரில் தனியார் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை அமைச்சர் அன்பரசன், முன்னாள் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அன்பரசன், பள்ளி, கல்லூரி என படிக்கிற காலத்திலேயே புதிய கண்டுபிடிப்பார்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், கல்லூரியில் தொடங்கி உள்ள திட்டம் பள்ளிகளிலும் விரைவில் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டார்
Search This Blog
Saturday, January 28, 2023
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84605253
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.