Breaking

Tuesday, January 31, 2023

வருமான வரி வழக்கில் உயர்கல்வி அமைச்சர் மீது நடவடிக்கையா? - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

வருமான வரி வழக்கில் உயர்கல்வி அமைச்சர் மீது நடவடிக்கையா? - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு Action against higher education minister in income tax case? - Madras High Court order
வருமான வரி வழக்கில் அமைச்சர் பொன்முடி மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது - சென்னை ஐகோர்ட்டு

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, அமைச்சர் பொன்முடிக்கு ரூ .60 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் , அமைச்சர் பொன்முடிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், " எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் பொன்முடி பணம் பெற்றதற்கான ஆதாரம் எதுவுமில்லை" என்று கூறினார். இதனையடுத்து, அமைச்சர் பொன்முடியின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, நோட்டீஸின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்.27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog