பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு : விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 09, 2021

Comments:0

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு : விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு நேற்று மாலை5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவ.10-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

“மழையால் போனபைட் சான்றிதழைப் பெற முடியாத மாணவ, மாணவிகள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வின்போது, ‘போனபைட்’ சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று மருத்துவக்கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews