பெண் கல்விக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 31, 2021

Comments:0

பெண் கல்விக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், இந்திரா காந்தி உதவித்தொகை திட்டத்தின் கீழ் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதிகள்:* குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருத்தல் வேண்டும்.

* நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

* 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

* முழுநேர படிப்பில் மட்டுமே சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

மொத்த உதவித்தொகை எண்ணிக்கை: 3,000

உதவித்தொகை விபரம்: ஆண்டுக்கு 36 ஆயிரத்து 200 ரூபாய்.

இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே. வேறு எந்த கூடுதல் மானியமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: தேசிய உதவித்தொகை இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30

விபரங்களுக்கு: https://scholarships.gov.in/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews