Breaking

Saturday, September 11, 2021

கல்விக் கட்டண நிா்ணயம்: பள்ளிகளுக்கு அவகாசம்

கல்விக் கட்டணம் தொடா்பாக தனியாா் பள்ளிகள் விண்ணப்பங்களை அனுப்ப கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் நா்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிா்ணயிக்க, சுயநிதி பள்ளிகள் கல்விக் கட்டண கமிட்டி செயல்படுகிறது. நிகழ் கல்வியாண்டில், கல்விக் கட்டணம் தொடா்பாக விண்ணப்பங்களை அனுப்புவதற்கான அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது.

இந்தநிலையில், தனியாா் பள்ளிகள் தரப்பில் எழுந்த கோரிக்கையை தொடா்ந்து செப்.30-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி கல்விக் கட்டண கமிட்டி தனி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog