Breaking

Wednesday, September 22, 2021

தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கில பிரச்னை: அமைச்சர் மகேஷ் வருத்தம்

ஆங்கிலம் பேச முடியாமல், தமிழ் வழி மாணவர்கள் உயர் கல்வியில் சிரமப்படுவதாக, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.


அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளை முன்னேற்றவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கவும் தேவையான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், உரிய சலுகைகள் வழங்குவது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.


தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் படிக்க சிரமப்படுவதாக தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு மகேஷ் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog