தமிழக தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 03, 2021

Comments:0

தமிழக தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தலைவர் ரா.நடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இடமாறுதல் கலந்தாய்வு :

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த வருடம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதனை ஏற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு களப் பணியில் ஈடுபட்டனர். இணைநோய் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி அனைத்து ஆசிரியர்களும் நேற்று முதல் பள்ளிக்கு வருகை புரிய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தலைவர் ரா.நடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள 17 சதவீதம் அகவிலைப்படி உயர்வை, தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews