Breaking

Saturday, July 24, 2021

சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பு – உபி அரசு அறிவிப்பு!

உத்தரபிரதேசத்தில் ஆட்சியில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாநிலத்தின் முதன்மை மொழியை வளர்க்கும் விதமாக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு அதிக அளவிலான சமஸ்கிருத ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.

சமஸ்கிருத ஆசிரியர்கள்:
ஒவ்வொரு மாநிலத்தில் தங்களின் தாய் மொழியை வளர்ப்பதற்கு அரசு பல திட்டங்களையும் அறிவிக்கும். அதன் மூலம் மக்களிடையே மொழி ஆர்வம் அதிகரிக்கும் என்று அரசுகள் கருதுகிறது. மேலும் பல சலுகைகளையும் மொழி ஆர்வம் அதிகரிக்கும் வகையில் அரசுகள் அறிமுகப்படுத்தும். அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் சமஸ்கிருத மொழியை மேம்படுத்தும் வகையிலும், பண்டைய மொழியைக் கற்கும் முறையை நெறிப்படுத்துவதற்கும் சமஸ்கிருத ஆசிரியர் ஆட்சேர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சமஸ்கிருத பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மாநிலம் முழுவதும் சமஸ்கிருத ஆசிரியர் சேர்ப்புக்கான பெரிய அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். கோடை விடுமுறை காலத்தை தவிர்த்து, 2021-22 மற்றும் 2022-23 ஆகிய கல்வி அமர்வுகளுக்கு சமஸ்கிருத ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் சமஸ்கிருத மேல்நிலை பள்ளிகளில் சமஸ்கிருத ஆசிரியர்கள் கௌரவ அடிப்படையில் ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆசிரியர்கள் நேர்காணல் சமஸ்கிருத செயல்முறையிலேயே நடத்தப்படும். நடுத்தர அளவிலான ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000 மற்றும், அதற்கு கீழான நிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog