Breaking

Saturday, June 26, 2021

கொரோனா தொற்று குறைந்த பிறகு தனித்தேர்வர்களுக்கு தேர்வு!

கொரோனா தொற்று குறைந்த பிறகு தனித்தேர்வர்களுக்கு தேர்வு!
12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

11, 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10, 11ம் வகுப்பு எழுத்துத்தேர்வுகளின் அடிப்படையில் 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். கடந்த ஆண்டு 11ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.

11, 12ம் வகுப்பு எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்கள் தனி தேர்வர்களாக கருதப்பட்டு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31ம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.
- தமிழக அரசு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog