Breaking

Wednesday, June 02, 2021

கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இடம் பெற்ற அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
* கொரோனா அறிகுறிகள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, ஆக்சிஜன் அளவு 94 ஆக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது. மாறாக, வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும்
* ஆக்சிஜன் அளவு 90 முதல் 94க்குள் இருப்பவர்கள், ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா கவனிப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறலாம் *ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் உள்ளவர்களை மட்டுமே, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.இதுபோன்று மூன்று வகையில், கொரோனா நோயாளிகளை பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
வீட்டுத்தனிமை, கொரோ னா கவனிப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வகையில் குப்புற கவிழ்ந்து படுப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog