நாளை முதல் அடுத்த கல்வியாண்டு தொடக்கம் - 3.8 கோடி புதிய பாடப்புத்தகங்கள் அனுப்பிவைப்பு - மாணவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 31, 2021

Comments:0

நாளை முதல் அடுத்த கல்வியாண்டு தொடக்கம் - 3.8 கோடி புதிய பாடப்புத்தகங்கள் அனுப்பிவைப்பு - மாணவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க ஆலோசனை

நாளை முதல் அடுத்த கல்வியாண்டு தொடக்கம்; 3.8 கோடி புதிய பாடப்புத்தகங்கள் அனுப்பிவைப்பு: மாணவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க ஆலோசனை
நாளை முதல் அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில், 3.8 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் குடோன்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றை, மாணவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
கொரோனா ஊரடங்கு மற்றும் தமிழக சட்டப் பேரவை தேர்தல் பணிகளுக்கு மத்தியில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவை கழகம், அடுத்த (2021-22) கல்வியாண்டிற்காக கிட்டத்தட்ட 3.8 கோடி பாடப்புத்தகங்களை அச்சிட்டுள்ளது.
இதுவரை, 91% அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் குடோன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews