வேளாண்மை கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 29, 2021

Comments:0

வேளாண்மை கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் வேளாண்மை கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த குழுவின் அறிக்கையை, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தமிழக அரசின் தலைமை செயலாளரிடம் நேற்று வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் வேளாண்மை கல்லூரிகளில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையினர் அல்லாத மாணவர் சேர்க்கைகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தலைமையில் மாணவர் சேர்க்கை குழுவை தமிழக அரசு நியமித்தது.
ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது - கல்லூரிக்கல்வி இயக்குநர் இதனைத் தொடர்ந்து, இணைப்பு வேளாண்மை கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை தொடர்பாக பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று தலைமை செயலகத்தில் நேரில் அளித்தார்.
18 வயதுக்கு மேல் தடுப்பூசி முன்பதிவு இன்று துவக்கம்
இந்த நிகழ்ச்சியின்போது, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews