Breaking

Thursday, April 29, 2021

150 காலிப்பணியிடங்கள் - ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள மருத்துவ அலுவலர்கள் ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் உள்ள தகுதி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் நேரடியாக கல்வித்தகுதி உள்ளிட்ட சான்றிதழ்களுடன் வரும் இன்று மற்றும் நாளை (29ம் தேதி மற்றும் 30ம் தேதி) காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ளலாம். மருத்துவ அலுவலர்களுக்கான 150 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!!
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவக்கவுன்சிலில் பதிவு பெற்றவர்கள் மாதம் 60 ஆயிரமும், செவிலியர் பணியிடம் 150 இடங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படித்து நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்த டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் வழங்கப்படும். இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
8ம் வகுப்பு முடித்தவரா ? ரூ.50,000/- ஊதியத்தில் உயர்நீதிமன்ற வேலை
பணியில் சேருவதற்கான சுயவிருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். மேலும் நேர்காணலுக்கு வர வேண்டிய முகவரி உறுப்பினர் செயலர், மாநகர நல அலுவலர், சென்னை மாநகர நல சங்கம், பொது சுகாதாரத்துறை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, சென்னை-600 003.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog