Breaking

Wednesday, April 21, 2021

தமிழகத்தில் மீண்டும் ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போகிறது பிளஸ் 2 தேர்வு? கல்வியாளர்கள் அச்சம்

தற்போதுள்ள கொரோனா தொற்று பரவல் சூழ்நிலையில் பிளஸ் 2 தேர்வு அக்டோபர் வரை தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு – 502 காலிப்பணியிடங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகள் திறப்பது குறித்து பேசப் பட்டது. ஆனால் பலத்த எதிர்ப்பு கிளம்பவே ஜனவரி மாதம் பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் வகுப்புகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந் தன. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் மே மாதம் தேர்வு என்று அறிவித்தனர். ஆனால் தற்போதைய அறிவிப்பின்படி கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால் பிளஸ் 2 தேர்வை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் மாணவ மாணவியருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், மே 2ம் தேதி தமி ழக சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு புதிய அரசு பொறுப்பேற்றால் அந்த அரசில் அமைச்சர்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு தனியாக அமைச்சர் நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பேற்ற பிறகு, அவர்கள் அதிகாரிகளுடன் கலந்து பேசி பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து அறிவிப்பார். இதற்குள் கொரோனா பாதிப்பு குறைந்துவிடுமா என்று கணிக்க முடியாது. அதனால் அக்டோபர் மாதம் வரை பிளஸ் 2 தேர்வு தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது. அல்லது டிசம்பர் வரை கூட தள்ளிப் போகும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
நாளை ஏப்ரல் 22 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – ஹரியானா கல்வித்துறை அமைச்சர் தகவல்!
இதனால் மாணவர்களின் மன நிலை பாதிக்கப்ப டும். பொறியியல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு காத்திருக்கும் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். இதை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை பிளஸ் 2 தேர்வில் உரிய முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog