Breaking

Saturday, March 27, 2021

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் கல்வி நிலையங்களுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை இறுதியாண்டு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள்& அறிவுரைகள் வலியுறுத்துதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் உத்தரவு
மேலும், செய்முறை தேர்வுகளை வரும் 31ம் தேதிக்குள் நேரடி முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை சமர்ப்பித்தல், viva - voce போன்றவற்றை ஆன்லைனிலேயே நடத்திக்கொள்ள வேண்டும் மேலும், மாணவர்களை நேரடியாக அழைத்து தேர்வு நடத்த முடியாவிட்டால் முன் அனுமதி பெற்று பின்னர் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog