6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 18 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 13, 2021

1 Comments

6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 18 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு

குஜராத்தில் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 18ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு: குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இதேபோல், இந்த வகுப்புகள் அனைத்திற்கும் ஆன்லைன் கல்வியும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 9 முதல் 12 வகுப்புகளுக்கு இயல்பான வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கும், கல்லூரியின் முதல் ஆண்டுக்கான கல்வியை மீண்டும் தொடங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. எனவே குஜராத் அரசு இன்று 6 முதல் 8 ஆம் வகுப்புகளை மாநிலத்தில் தொடங்குவது குறித்து முடிவு செய்துள்ளது. மேலும் நேரடி வகுப்புகளுக்கு இணையாக ஆன்லைன் கல்வியையும் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவைப் பற்றி கல்விச் செயலாளர் வினோத் ராவ் கூறுகையில், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளும் கோவிட் -19 வழிகாட்டுதல்களையும், கல்வியை மீண்டும் தொடங்குவதற்கான நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி மாணவர்களின் வருகை கட்டாயமாக்கப்படாது, ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களின் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.

1 comment:

  1. எந்த மாநில அரசு என தலைப்பில் குறிப்பிடலாமே ? ஏன் இப்படி ?!

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews