TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 18, 2020

Comments:0

TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
814 கணினி ஆசிரியர் தேர்வில் 3 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையை பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 3 மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வானவர்களுக்கு நியமனம் வழங்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவு.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 814 கணினி ஆசிரியர்கள் தேர்வின் போது 3 தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2019ம் ஆண்டு 814 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை வரவேற்று கடந்த மார்ச் 1ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு 26 ஆயிரத்து 882 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு 2019 ஜூன் மாதம் ஆன் லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 3 மையங்களில் இணையதள சேவை கிடைக்காமல் தேர்வு தடைபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணப்பதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் மொபைல் போன் எடுத்து வர அனுமதி அளித்ததாகவும், 3 மணி நேரத்திற்கு மேல் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி, இப்பணிக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தேர்வு மையங்களிலும் சிசிடிவி கருவி பொருத்தப்படவில்லை. பல தேர்வு மையங்களில் தேர்வுகளை எழுத கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 8ம் தேதி மற்றும் 10ம் தேதி பல மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியுள்ளது. திருச்செங்கோடு, கும்பகோணம், திருச்சியில் உள்ள 3 தேர்வு மையங்களில் மொபைல் போனை வைத்து தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தலாம் பட்டியலை இறுதி செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் 3 மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்வாகிய விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை அரசு மேற்கொள்ளலாம். அதேசமயம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருச்சி தனியார் பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த 3 தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படுகிறது.இந்த ஆணையத்திற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தரவேண்டும். முறைகேடுகள் குறித்து ஆணையம் விசாரித்து அறிக்கையை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நடத்தும் நீதிபதி ஆதிநாதனுக்கு ஊதியமாக அரசு 3 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வழக்கு விசாரணை 2021 பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews