வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில் புரிவதற்கான தேர்வு குறித்த மனு - உயர்நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 17, 2020

Comments:0

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில் புரிவதற்கான தேர்வு குறித்த மனு - உயர்நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில் புரிவதற்கான தேர்வு குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. FMGE தேர்வு வினாத்தாளை மதிப்பீடு செய்ய சுதந்திரமான நிபுணர் குழு அமைக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ பட்டம் பெற்று தேர்வில் தோல்வியடைந்த 17 பேர் மனு நிராகரிக்கப்பட்டது. இந்தி மொழியில் லோகோக்களுடன் வினாக்கள் இடம் பெற்றதாக 17 பேரும் வழக்கு தொடர்ந்தனர். நிபுணர் குழுவால் வினாத்தாள் ஆய்வு செய்யப்பட்டதாக மருத்துவ ஆணையம், தேசிய தேர்வுகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. முழுமையாக தயார்படுத்திக்கொண்டு அடுத்த தேர்வை எதிர்கொள்ள மனுதாரர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவிற்கு வரும் பட்டதாரிகள், இங்கு மருத்துவத் தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கும் பொருட்டு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வு எனப்படும். கடந்த 2002ம் ஆண்டு இந்தத் தேர்வை இந்திய மருத்துவக் கவுன்சில் அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஏதேனும் ஒரு வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்திய மருத்துவக் கவுன்சிலிலோ அல்லது ஏதேனும் ஒரு மாநில மருத்துவக் கவுன்சிலிலோ, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பதிவு செய்து கொள்ள விரும்பினால், அவர் மேற்கண்ட தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற வேண்டியது கட்டாயம். இதன்மூலம், சம்பந்தப்பட்டவரின் அறிவு மற்றும் திறமை சோதிக்கப்படும். இந்த நுழைவுத்தேர்வை ஒரு வெளிநாட்டுப் பட்டதாரி எழுத வேண்டுமெனில், அவர் படித்த மருத்துவக் கல்லூரி, சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) டைரக்டரியில் பட்டியலிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும். வருடத்திற்கு 2 முறை, டெல்லியில், தேசிய தேர்வு வாரியத்தால் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் நடத்தப்படும் இத்தேர்வில், மொத்தம் 300 மதிப்பெண்கள். Pre and para-clinical பாடங்களுக்கு 100 மதிப்பெண்களும், Para clinical பாடங்களுக்கு 200 மதிப்பெண்களும் ஒதுக்கப்படும். ஒருவர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, இத்தேர்வில் தேர்ச்சிப்பெற முடியும். இத்தேர்வில் வெற்றிபெற்ற ஒருவர், MCI அல்லது மாநில மருத்துவக் கவுன்சில்களுக்கு, நிரந்தர அல்லது தற்காலிக பதிவிற்காக விண்ணப்பிக்கலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews