மருத்துவப் படிப்புக்கான 7.5 இட ஒதுக்கீட்டில் 303 அரசுப் பள்ளி மாணவா்கள் பயன் பெறுவா்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 22, 2020

Comments:0

மருத்துவப் படிப்புக்கான 7.5 இட ஒதுக்கீட்டில் 303 அரசுப் பள்ளி மாணவா்கள் பயன் பெறுவா்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவப் படிப்புக்கான 7.5 இட ஒதுக்கீட்டில் 303 அரசுப் பள்ளி மாணவா்கள் பயன் பெறுவா் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூா், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 519 தனியாா் பள்ளிகளுக்கு தொடா் அங்கீகார ஆணைகளை வழங்கி அவா் மேலும் பேசியது:தமிழக அரசு வெளிப்படைத் தன்மையோடு செயலாற்றுகிறது. தமிழகப் பாடத் திட்டத்தை நாடே உற்று நோக்குகிறது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்கள் நீட் தோ்வில் அதிகம் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். பிற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை தொலைநோக்குச் சிந்தனையோடு அரசு செயல்படுத்துகிறது. தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகாரம் தற்போது 2 ஆண்டுக்கொரு வழங்கப்படுகிறது. ஆனால் இதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கால் 3 ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வழக்கு வாபஸ் பெறப்பட்டால் 3 ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்குவோம். நிரந்தர அங்கீகாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவப் படிப்புக்கான 7.5 % இட ஒதுக்கீட்டில் 303 அரசுப் பள்ளி மாணவா்கள் பயன் பெறுவா் என்றாா் அமைச்சா்.நிகழ்வுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமையுரையாற்றினாா்.விழாவில் மணப்பாறை, மண்ணச்சநல்லூா், முசிறி எம்.எல்.ஏக்கள், பல்வேறு கல்வி நிறுவன நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மெட்ரிக் பள்ளிகள் இயக்குநா் அ. கருப்பசாமி வரவேற்க, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செ. சாந்தி நன்றி கூறினாா்.பெட்டிச் செய்தி..‘விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும்’‘மருத்துவப் படிப்புக்கான சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும். 7.5% இட ஒதுக்கீட்டுக்காக யாரும் போராட வேண்டியதில்லை. வரும் டிசம்பருக்குள் 7,200 பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள், 80 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மாா்ட் போா்டு வசதிகள் செய்யப்படும். நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் மாணவா்கள் கூடுதலாகச் சோ்ந்துள்ளதையடுத்து சோ்க்கை விகிதம் 4.5 ஆக உயா்ந்துள்ளது. கடந்தாண்டை விட நிகழாண்டில் அதிகளவில் அரசு அலுவலா்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். அதேநேரத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சோ்க்கக் கட்டாயப்படுத்த முடியாது. இது தனிமனித உரிமை. பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வா் முறைப்படி அறிவிப்பாா். அதேவேளையில், தற்போது பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை’ என்றாா் அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews